கீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கிய தமிழக அரசு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2020-02-21 10:09 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின் படி,  2020-21 ஆம் ஆண்டிற்கு, 11 கோடியே 91 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பனை அறை, நிர்வாகக் கூடம், சேமிப்பு கிடங்கு, சிற்றுண்டி கடை மற்றும் நூல் விற்பனை கடையுடன் கூடிய விரிந்த அகழ்வைப்பக வளாகம் அமைக்கப்பட உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்