முன்விரோத தகராறு - நாட்டு குண்டு வீசியவர்களுக்கு வலைவீச்சு

சென்னை, பெரும்பாக்கத்தில், முன்விரோதம் காரணமாக நாட்டு குண்டு வீசி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-02-18 22:17 GMT
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த முத்துசெல்வம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் உள்பட சிலருக்கும் இடையே, முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துச்செல்வம் பெரும்பாக்கம், நேருநகர் சந்திப்பில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், முத்துசெல்வத்தை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். கத்தியால் வெட்ட முயன்ற நிலையில், முத்துசெல்வம் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனே அந்த நபர்கள் முத்துசெல்வம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் முத்துசெல்வம் பலத்த காயமடைந்த நிலையில், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். முத்துச்செல்வம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்