உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : "முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என உறுதியளித்தார்.

Update: 2020-02-17 13:03 GMT
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு 1 லட்சமும், மேல்நிலைபள்ளியாக உயர்த்துவதற்கு 2 லட்சமும் பொதுமக்கள் திரட்டி கொடுக்கும் நிலை உள்ளதாக கூறினார். பொதுமக்கள் பங்கீட்டு தொகையை அரசே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், உறுப்பினரின் கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்