நகராட்சி அலுவலரை முற்றுகையிட்ட மக்கள் - குடிநீர் வழங்கவில்லை என புகார்

குன்னூரில் ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-02-17 11:06 GMT
குன்னூரில் ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்தும் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹவுசிங் யூனிட் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதி பொதுமக்கள், நகராட்சி அலுவலக மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்