புனித செபஸ்தியார் தேவாலய பெருவிழா தொடக்கம் - திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளையில் உள்ள பழமையான புனித செபஸ்தியார் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளையில் உள்ள பழமையான புனித செபஸ்தியார் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து "அச்சமில்லா அன்புலகை படைப்போம்" என்ற பெயரில் திருப்பலி மற்றும் ஜெபமாலை நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.