பொங்கலை முன்னிட்டு கோலப்போட்டி: கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் புள்ளி கோலப்போட்டி

காணும் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2020-01-17 18:29 GMT
காணும் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது. மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற போட்டியில்  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புள்ளிகோலத்தை பல்வேறு  வகைகளில் போட்டு அசத்தினர். இந்த போட்டியில் சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்