சேலம் : வெளிநாட்டு பரிசை பெற உதவக் கோரி பண மோசடி

வெளிநாட்டு பரிசுத்தொகையை பெற உதவக்கோரி, விவசாயியிடம் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த, 4 பேரை, சேலம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-14 04:17 GMT
வெளிநாட்டு பரிசுத்தொகையை பெற உதவக்கோரி, விவசாயியிடம்  ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த, 4 பேரை, சேலம்  போலீசார் கைது செய்தனர். திருச்செங்கோட்டை சேர்ந்த விவசாயி அருள்ஜோதி என்பவரிடம் மோசடி செய்த கும்பல், அவரது உறவினர் பழனிவேலிடம், 60 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளனர். இதுகுறித்து, பழனிவேல் சேலம் போலீசாரிடம் புகார் அளித்தார்.  தொடர்ந்து, சேலம் ஐந்துரோடு பகுதியில் சுற்றித்திரிந்த சிவகுமார், நிசாந்த் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்