78-வது நாளாக நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை : நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை தொடர்ந்து 78-வது நாளாக தண்ணீர் நிரம்பி வழிகிறது.;
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை தொடர்ந்து 78-வது நாளாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது, 126 புள்ளி 28 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 42 கனஅடி நீர் வரும் நிலையில், அது முழுமையாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.