"மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் - 15 நாட்களுக்குள் அறிவிக்க உத்தரவிட வேண்டும்"

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு

Update: 2019-12-16 18:44 GMT
மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினை வெளியிட உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள  மனுவில், தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு தேர்தல் ஆணையம் தவறான தகவல்களை அளித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மாநகராட்சி, நகராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதால், 15 நாட்களுக்குள் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்