"நித்தி போல தனி தீவு வாங்கி, முதல்வராகலாம்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் ஒருபோதும் தமிழக முதலமைச்சர் ஆக முடியாது என தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-10 20:20 GMT
முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் 141 வது பிறந்த நாளையொட்டி, சென்னை - பாரிமுனையில் அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மலர் தூவி, மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் கனவில்  ஸ்டாலின் இருப்பதாக குறிப்பிட்டார். நித்யானந்தா மாதிரி, தீவு வாங்கி,  ஸ்டாலின் முதலமைச்சர் ஆகலாம் என ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்