சென்னை: முன்விரோதத்தில் மீனவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக மீனவர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-25 07:50 GMT
சென்னை காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக மீனவர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் துடிதுடித்த மீனவர் லோகேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே போலீசார் லோகேஷை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்