காதல் கணவருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த மாணவி

சேலம் கெங்கவல்லி அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

Update: 2019-11-21 07:53 GMT
சேலம் கெங்கவல்லி அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை இந்திராநகரை சேர்ந்த ரஞ்சிதா என்ற கல்லூரி மாணவி, திடீரென மாயமானதாக மாணவியின் பெற்றோர்  கெங்கவல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவி ரஞ்சிதா தன் காதல் கணவருடன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். உறவினரான விஷ்ணு என்பவரை தான் காதலித்து வந்த‌தாகவும், அதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த‌தால், வீட்டில் இருந்து வெளியேறி அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் மாணவி கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்