ஐஐடி மாணவி தற்கொலை: விசாரணை கோரி 2 மாணவர்கள் உண்ணாவிரதம் - கோரிக்கை ஏற்கப்படும் என முதல்வர் உறுதி

மாணவி பாத்திமா தற்கொலைக்கு உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என ஐஐடியின் முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

Update: 2019-11-19 11:21 GMT
மாணவி பாத்திமா தற்கொலைக்கு உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என ஐஐடியின் முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
பாத்திமாவின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி, ஐ.ஐ.டி மாணவர்கள் அசார் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதை தொடர்ந்து ஐஐடியின் முதல்வர் சிவக்குமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் பிரச்சனைகளை கண்டறிய, வல்லுநர் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதால் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்