பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
ஒசூர் அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பெங்களூர் -காரைக்கால் பயணிகள் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒசூர் அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பெங்களூர் -காரைக்கால் பயணிகள் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை உடனே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று என்ஜினின் சக்கரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.