6 அரசு புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-23 19:00 GMT
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் அமையவுள்ள இந்த புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஆயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பில் தெரிவித்து கொள்வதாகவும், தனது அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்