விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கட்டடங்களுக்கு சீல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 7 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

Update: 2019-10-10 22:41 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 7 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. வீடுகள் கட்டுவதற்கு என்று அனுமதி பெற்று, கட்டடம் கட்டி முடிந்தவுடன், அவற்றை வணிக ரீதியாக சிலர் பயன்படுத்தி வருவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில்,  விதிமுறைகளை மீறி இயங்கி வந்த கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கோத்தகிரி பகுதிகளில் உள்ள 7 தங்கும் விடுதிகள், விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்ததால், அதற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்