அரக்கோணம் தண்டவாளம் விரிசல் - சென்னை சென்ற ரயில்கள் காலதாமதம்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாளம் விரிசல் காரணமாக, ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாளம் விரிசல் காரணமாக, ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது. சோளிங்கர் மகேந்திரவாடி ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை அடுத்து, காட்பாடியிலிருந்து அரக்கோணம் வழியாக வந்து கொண்டிருந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ரயில் மற்றும் மதுரை சூப்பர் பாஸ்ட் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் உடனடியாக தண்டவாள விரிசல்களை சரி செய்தனர்.