ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் வந்தடைந்தது

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கபட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தது . பக்தர்கள் மகிழ்ச்சியில் மலர்கள் தூவி நடராஜரை வரவேற்றனர்.

Update: 2019-09-23 10:58 GMT
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சிலையை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையிலான போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட சிலைக்கு பக்தர்கள், சிவனடியார்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்