திண்டிவனம் : தேர்வுக் கட்டணம் உயர்வைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கல்லூரியில், தேர்வுக் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-20 11:09 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கல்லூரியில், தேர்வுக் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தாள் ஒன்றுக்கு 68 ரூபாயாக இருந்த தேர்வுக்கட்டணம், திடீரென நூறு ரூபாயாக உயர்த்தப்பட்டதாக கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்