"சென்னையில் கனமழை தொடரும்"- செல்வகுமார், தனியார் வானிலை ஆர்வலர்

சென்னையில் கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-19 05:52 GMT
ஆந்திர மாநிலத்தில் வங்க கடல் பகுதியில் நே​ற்று காற்றழுத்த சுழற்சி, தாழ்வு நிலையாக மாறி நீடித்த நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களி​ல் கனமழை பெய்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மும்​பை நோக்கி நகர்ந்து வருவதால். இரவில் சென்னையில் கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் அதிகப்பட்சமாக 21.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வரும் 20 ஆம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த சுழற்சியால், இம்மாத இறுதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்