மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம் - கைது செய்த காவல்துறை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் உணவகத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2019-09-18 09:59 GMT
செங்கல்பட்டை சேர்ந்த வழக்கறிஞர் வினோத், தனது நண்பர்கள் 3 பேருடன் துரித உணவகத்தில் ரகளை செய்துள்ளனர். இதில் காயம் ஏற்பட்டதால், இரு தரப்பினரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அங்கும், வழக்கறிஞர் வினோத், மருத்துவர் மற்றும் செவிலியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். ஆத்திரம் அடைந்த மருத்துவர்கள், வழக்கறிஞரை கைது செய்யக் கோரி உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வழக்கறிஞரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது நண்பர்கள் மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்