நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-16 20:07 GMT
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் அவர், மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கையொப்பமிட வருவதாக வந்த தகவல் பரவியது. இதனால், தமிழகம் முழுவதிலும் இருந்து அவரால் ஏமாற்றப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் திடீரென மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்