பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் - அமைச்சர்களின் அதிரடி உத்தரவால் பரபரப்பு

பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் என அமைச்சர்கள் கூறியதால் அவசர அவசரமாக பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் அருப்புக் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-09-14 10:27 GMT
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், கூட்டுறவு நிறுவனத்தின் பெட்ரோல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வருகை தந்தனர். அப்போது,  அவர்களை வரவேற்கும் விதமாக  சாலையின் இருபக்கமும் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அவசர அவசரமாக அகற்றிய பின்னரே அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து  கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்