சண்டையில் காயமடைந்த கொடைக்கானல் இளைஞர் - தையல் போட்ட சம்பவத்தால் அதிர்ச்சி

கொடைக்கானலில் இளைஞர்களுக்குள் நடந்த சண்டையில் காயமடைந்து சிகிச்சை பெற சென்றவருக்கு அரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியர் கையில் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-11 10:34 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாத போது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிகிச்சை அளித்து வருவது தற்போது தொடர் கதையாகி வருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். இளைஞர்களுக்கு இடையேயான சண்டையில் ரபீக் என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது, இதனைத் தொடர்ந்து ​அரசு மருத்துவமனைக்கு சென்ற ரபிக்குக்கு, பிணவறையில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் ஊழியர் தையல் போட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார், இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனிடையே பணியில் உள்ள மருத்துவர் மற்றும் செவி​லியர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்