வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடப் மாற்றத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-09-10 08:19 GMT
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடப் மாற்றத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொது மக்கள் வருகை  குறைவாகவே காணப்பட்டது. வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் பல வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்