ஆசிரியர் தகுதி தேர்வில் ருசிகரம்... - தேர்வர்கள் மூலம், தேர்வு வாரியத்துக்கு ரூ. 20 கோடி வருவாய்

986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தேர்வு வாரியம் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

Update: 2019-09-09 10:28 GMT
* 986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தேர்வு வாரியம் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 

* அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5 லட்சத்து 42 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 

* தேர்வு எழுதியவர்களில்,1 புள்ளி 16 சதவிகிதம் பேர் மட்டும், தேர்ச்சி பெற்றனர். அதாவது வெறும் 967 பேர் மட்டும் தேர்வாகினர். 

* இதற்காக, விண்ணப்பம் செய்த பட்டியல் இனத்தவர்கள் 250 ரூபாயும், மற்றவர்களுக்கு 500 ரூபாயும் செலுத்தி இருந்தனர். 

* 967 பேர் தேர்ச்சியுடன் தேர்வு முடிவுகள் கடும் வீழ்ச்சியாக அமைந்தாலும், விண்ணப்பங்கள் மூலம், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்