திண்டுக்கல் : மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஸ்கேட்டிங் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஸ்கேட்டிங் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. அக்டாபர் மாதம் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தஞ்சாவூரில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பங்கேற்க உள்ள வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தேர்வில் பங்கேற்றிருந்த நிலையில், ஆண்கள் பிரிவில் 24 பேரும், பெண்கள் பிரிவில் 24 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.