Karnataka Tiger | கூட்டமாக ஊருக்குள் படையெடுத்த புலிகள்.. மரண பீதியில் மக்கள் - பகீர் CCTV
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் கூட்டமாக உலாவிய 5 புலிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நஞ்சே தேவனபுரா – வீரனபுரா கிராமங்களுக்கு இடையே வலம் வந்த புலிகளின் காட்சி அப்பகுதியில் உள்ள, சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
புலிகளின் நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவனமாக இருக்க எச்சரித்துள்ளனர். மேலும், புலிகளை கண்டறிந்து வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கி உள்ளனர்.