ஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Update: 2019-09-05 19:41 GMT
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டனர்,சென்னையில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர், பங்கேற்று, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர். விருதுடன் சேர்த்து ஆசிரியர்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கமும், வழங்கப்பட்டன. விழாவில் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போல், ஆசிரியர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்