விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்கள் - மத்திய ​தலைமை தகவல் ஆணையர் உத்தரவு

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை நான்கு வாரங்களில் வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ​தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-08-29 13:05 GMT
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதுதொடர்பான ஆவணங்களை வழங்ககோரி பேரறிவாளன் தரப்பில் மத்திய தகவல் ஆணையம் முன்பு முறையிடப்பட்டது. இது தொடர்பான தீர்ப்பில், அரசியல் சாசனம் பிரிவு 74(2)ன்படி அமைச்சரவை மட்டுமே முடிவை கோர முடியாது என்றும், அம்முடிவை எடுக்க காரணமாக இருந்த அனைத்து ஆவணங்களையும் 4 வாரங்களில் பேரறிவாளனுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்