தாளவாடியில் வீட்டுக்குள் நுழைந்த 6 அடி நீள பாம்பு - பாம்பை லாவகமாக பிடித்து வெளியேற்றிய விவசாயி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை விவசாயி சங்கர் லாவகமாக பிடித்து வெளியேற்றி அசத்தினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில், வீட்டுக்குள் நுழைந்த பாம்பை விவசாயி சங்கர் லாவகமாக பிடித்து வெளியேற்றி அசத்தினார். கணேசா நகர் கிராமத்தைச் சேர்ந்த கரியப்பன் என்பவரது வீட்டில் பாம்பு புகுந்தது. இது தொடர்பான தகலறிந்து வந்த சங்கர், பாம்பை லாவகமாக பிடித்து, சாக்குப் பையில் அடைத்து வெளியேற்றினார்.