சுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-08-22 21:14 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக இங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி, பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் 77 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானோர்  மலர் தூவி மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்