அரசு பள்ளிக்கு கைகொடுத்த தொண்டு நிறுவனம் : கல்வியை தொடரும் 25 நரிக்குறவர் இன மாணவர்கள்

பொன்னேரியில், நரிக்குறவரின மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

Update: 2019-08-18 03:51 GMT
பொன்னேரியில், நரிக்குறவரின மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். பொன்னேரி ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அர்ஜுன், நரிக்குறவ சமுதாய மக்களை சந்தித்து, கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்துள்ளார். வாகன வசதி செய்து கொடுத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் என அந்த சமுதாய மக்கள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து, சமூக சேவகர்கள், தனியார் தொண்டு நிறுவனம் உதவியோடு, நரிக்குறவரின மாணவர்களுக்கு தலைமையாசிரியர் அர்ஜுன் வாகன வசதி செய்து கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்