உலக பழங்குடியினர் தினம் கொண்டாட்டம் - ஆடிப்பாடி மகிழ்ந்த பழங்குடியினர்

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலைகிராமத்தில் உள்ள பழங்குடி மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Update: 2019-08-10 13:11 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, மலைகிராமத்தில் உள்ள பழங்குடி மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வெள்ளறக்கல் மலை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இன்று பழங்குடியின தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆதிவாசி அமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மக்கள், பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்