கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை : கணவன் - மனைவி உள்பட 5 பேர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-08-08 02:15 GMT
திருவொற்றியூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு மாவா என்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கணவன் மனைவியான வெங்கடேசன், தீபா தம்பதியை கைது செய்து, அவர்கள் வீட்டில், பதுக்கியிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மொத்த விற்பனை செய்த புதுவண்ணாரப்பேட்டை மாரியப்பன், கொருக்குப்பேட்டை கார்த்திக், தண்டையார்பேட்டை ஆரோக்கியநாதன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்