கணவரிடம் இருந்து 40 சவரன் நகையை மீட்டு தாருங்கள் : தாசில்தார் மனைவி தர்ணா - பரபரப்பு

சேலம் விமான நிலைய நிலம் எடுப்பு தாசில்தாரிடம் இருந்து திருமணத்தின் போது வழங்கிய 40 சவரன் நகையை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2019-08-06 02:27 GMT
சேலம் விமான நிலைய நிலம் எடுப்பு தாசில்தாரிடம் இருந்து திருமணத்தின் போது வழங்கிய 40 சவரன் நகையை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி  தர்ணாவில் ஈடுபட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நர்மதா. இவரும், இவரது கணவரான தாசில்தார் ரவிக்குமாரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த நர்மதா, 40 சவரன் நகை, ரொக்கபணம்  60 ஆயிரம்  மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை மீட்டு தரக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்