பெண் வழக்கறிஞரை தாக்கிய அரசு ஊழியர் ... மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்

சென்னையில் மது குடிக்க பணம் தராததால் பெண் வழக்கறிஞரை தாக்கியதாக அரசு ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-04 08:34 GMT
சென்னையில் மது குடிக்க பணம் தராததால் பெண் வழக்கறிஞரை தாக்கியதாக அரசு ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொருக்குபேட்டையில் வசிக்கும் வழக்கறிஞர் பிரியாவின் எதிர் வீட்டை சேர்ந்த கோகுல் என்பவர் தினமும் குடித்துவிட்டு வந்து அக்கம் பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அரசு ஊழியரான கோகுல், மது குடிக்க பணம் தராததால் பிரியாவை வீடுபுகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்