தேசிய வரைவு கல்வி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது - ஸ்டாலின்
தேசிய வரைவு கல்வி கொள்கையை திமுக சார்பாக கடுமையாக எதிர்ப்பதாக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய வரைவு கல்வி கொள்கையை, திமுக சார்பாக கடுமையாக எதிர்ப்பதாக, தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தேசிய கல்விக் கொள்கையானது ஏழை மக்களுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்திற்கு இது எதிரானது என்றும், வரைவு கல்வி கொள்கையானது ஒருதலை பட்சமாகவும், இந்தி மேலாதிக்கத்திற்கும் ஆதரவாக உள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுகவின் சார்பில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) July 29, 2019
இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஆதரவான #NEP2019 ஏழைகளுக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு முரணானது, அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கு எதிரானது.@PMOIndia
https://t.co/1m9T52VyE4