வேலூர் மக்களவை தொகுதியில் இன்று பிரசாரம் துவக்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு வாணியம்பாடியில் இருந்து பிரசாரத்தை துவக்குகிறார்

Update: 2019-07-26 21:45 GMT
இதனிடையே, வேலூர் மக்களவை தொகுதியில்,அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மாலை 6 மணிக்கு வாணியம்பாடியில் இருந்து பிரசாரத்தை துவக்குகிறார். கே.வி. குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இரவு வேலூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதேபோல, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினும் இன்று, பிரசாரத்தை துவக்குகிறார். கே.வி. குப்பம், வாணியம்பாடி, அணைக்கட்டு, வேலூர், ஆம்பூர், 
மற்றும் குடியாத்தம் ஆகிய பகுதிகளில், அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே, வேலூர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்