24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தின் குருவிமலை, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலசப்பாக்கம் வழியாக பூவாம்பட்டு வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

Update: 2019-07-25 14:06 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தின் குருவிமலை, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலசப்பாக்கம் வழியாக பூவாம்பட்டு வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு கொடுத்த 24 மணி நேரத்தில் கோரிக்கையை பரிசீலித்து அந்த வழித்தடத்தில் பேருந்தை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார். பேருந்து வழித்தட தொடக்க விழாவில் பங்கேற்ற, அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அந்த வழி தடத்தில் பேருந்தில் பொது மக்களுடன் பயணம் மேற்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்