தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் - ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி
தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என பிரபல கராத்தே வீரர் ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி கூறியுள்ளார்.
சென்னை சாந்தோமில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் கராத்தே வீரர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.இதில் உலகின் முன்னிலை வீரரான ஹங்கேரிய நாட்டை சேர்ந்த ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் எனவும் அவர்களுக்கு ஊக்கமளித்தால் உலக அளவில் சாதனை படைப்பார்கள் என்றார்.