விருத்தாச்சலம் : குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்ப நடத்த வர மறுத்த மனைவி மற்றும் அவரை அனுப்பி வைக்க மறுத்த மாமியாரை மருமகன் கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.

Update: 2019-07-21 03:50 GMT
ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் - பபிதா தம்பதிக்கு திருமணமாகி 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஆனால், 5 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய பபிதா, கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து, கடந்த 10 நாட்கள் முன்பு இருவரும் மீண்டும் இணைந்து குடும்பம் நடத்த தொடங்கிய போது, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பபிதா மீண்டும் குடும்பம் நடத்த மறுத்து, தாய் விமலா வீட்டிற்கு சென்றார். மனைவி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த கார்த்திக், மாமியார் வீட்டிற்கு சென்று, அவரையும் மனைவி பபிதாவையும் கண்ணாடி பாட்டிலால் தாக்கி, விட்டு தலைமறைவானார். இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்