வேலூர் : கள்ள சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர்.

Update: 2019-07-17 05:53 GMT
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர். பூதமலையில் மர்ம நபர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சி அதனை சுற்றுவட்டார பகுதியில் விநியோகம் செய்து வந்துள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பூதமலைக்கு சென்று சாராயம் காய்ச்ச பயன்படும் மூலபொருட்களை அழித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்