ஆதின மடங்களின் சொத்து விவரங்களை பதிவு துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அனைத்து ஆதின மடங்களின் சொத்து விவரங்களை பதிவு துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-15 19:02 GMT
தூத்துக்குடி செங்கோல் ஆதின மடத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதால் அதனை அளவீடு செய்ய உத்தரவிடக் கோரி, ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்தும், ஆதீன மடங்களின் சொத்துக்கள் குறித்த விபரங்களை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கவும்,  பதிவுத்துறை தலைவர் அதனை உறுதி செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்