மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிக்க முயற்சி - கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி அடி

மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம், 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற இரு கல்லூரி மாணவர்களை பொதுமக்களே அடித்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2019-07-12 20:19 GMT
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடந்து சென்ற  பெண்ணிடம், 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க  முயன்ற இரு கல்லூரி மாணவர்களை  பொதுமக்களே அடித்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரமணா நகர் பகுதியில் தெய்வானை என்பவர் தமது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்கு நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது தெய்வானை கூச்சலிட்டதால், சுற்றி இருந்தவர்கள் இரு நபர்களையும் பிடித்து அடித்து உதைத்தனர். மீஞ்சூர் போலீசார், விசாரணை நடத்தியதில், அவர்களது பெயர் மணிகண்டன் மற்றும் பிரசாந்த் என்பதும் இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.செலவிற்காக இருவரும், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.பொதுமக்கள் இரண்டு மாணவர்களை விரட்டிவிரட்டி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்