தமிழகத்தில் மழை வேண்டி இசைக் கச்சேரி - பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ள இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற்று வருகிறது.

Update: 2019-07-02 08:32 GMT
தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ள இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற்று வருகிறது. தியாகராயநகரில் உள்ள ஸ்ருங்கேரி மடத்தில் இன்றிரவு 9 மணி வரை நடைபெறும் இந்த இசை கச்சேரியில் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் மழை வேண்டி அமிர்தவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட கர்நாடக இசை ராகங்களில் பாடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்