பல்கலை. விதிப்படி உதவிப் பேராசிரியர் நியமனம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிப்படி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிப்படி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்த வெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள் என்று குறிப்பிட்டார். இந்த விதியை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், இதனை மாநில அரசு உறுதிப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.