கலப்பட தேயிலை குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - தேயிலை வாரியம் அறிவிப்பு

கலப்பட தேயிலை தூள் பயன்பாடு குறித்து, தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என, தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2019-06-26 13:09 GMT
கலப்பட தேயிலை தூள் பயன்பாடு குறித்து, தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என, தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, தேயிலை வாரிய துணை இயக்குநர் ஹரி பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சமீப காலங்களில் கலப்பட தேயிலைத் தூளின் புழக்கமும் பயன்பாடும் அதிகரித்து வருவதாக புகார்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை தடுத்திட, பொதுமக்கள் கலப்பட தேயிலை தூள் பயன்பாடு இருப்பது தெரிந்தால் வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்