வைகோவுக்கு எதிரான இரு அவதூறு வழக்குகள் : ஒரு வழக்கில் விடுவிப்பு - மற்றொரு வழக்கில் மனு தள்ளுபடி​

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் இருந்து வைகோவை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த

Update: 2019-06-20 11:07 GMT
இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் இருந்து வைகோவை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு இயக்குனர் பாரதி ராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் காரணம் என பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடரபாக வைகோ சார்பில் தொடரப்பட்ட மறுஆய்வை மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில், மதிமுகவை உடைக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 2006-ம் ஆண்டு கடிதம் எழுதியது தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்