விவசாய நிலத்தில் மணல் அள்ள அரசு அனுமதிப்பதா? : அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விவசாய நிலத்தில் மணல் அள்ள வந்த அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-19 14:37 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விவசாய நிலத்தில் மணல் அள்ள வந்த அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாலப்பட்டி சேர்ந்த விவசாயி சாமிகண்ணுக்கு சொந்தமான நிலம் மாமுண்டி ஆற்றங்கரை அருகே உள்ளதால், காற்றில் அடித்துவரப்படும் மணல் நிலத்தில் தேங்கியுள்ளது.  இங்கு இன்று மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் மணல் அள்ள வந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்